India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என எஸ்பி மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.04.2024) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
வேலூரில் நேற்று (ஏப்.26) 104.54 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று வேலூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பஜாரில் நேற்று (ஏப்ரல்.26) இரவு குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ பழமண்டி கொட்டகைக்கு பரவியது. இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் அங்கிருந்த வியாபாரிகள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
வேலூர் சிறுகாஞ்சி பகுதியில் போடப்பட்ட சிமெண்டு சாலையை அதேப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், மேலும் அங்கு கற்களை வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று (ஏப்ரல் 26) மாலை வேலூர் ரவுண்டானா அண்ணாசாலையில் திடீரென அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர்.
மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
வேலூரில் நேற்று (ஏப்.25) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
வேலூர் நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அமிர்தி விலங்கியல் பூங்கா. 25 ஹெக்டர் அளவு உள்ள இப்பூங்காவில் பாதி வனமாகவும் மீதி சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மலையேற்றம், காட்டு விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சி இருப்பதால் பார்வையாளர்களின் வருகை அதிமாகி வருகிறது. எதிர்காலத்தில் இந்த பூங்காவில் யானைகள் முகாம் அமைத்து, சீரமைக்கப்பட்டு முதன்மை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை 2 ஆம் ஆண்டு பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை என அரசின் உத்தரவு உள்ளது. இருப்பினும் நிர்வாகம் தேர்வு கட்டணம் செலுத்துமாறு கட்டாய படுத்தியுள்ளது. இதனால் 15திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது நிர்வாகம் கட்டணம் தேவையில்லை என்று கூறியது.
Sorry, no posts matched your criteria.