Vellore

News January 19, 2026

வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 19, 2026

வேலூர்: மின் தடையா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

வேலூர் மக்களே! உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் 6 கோடி வர்த்தகம்

image

காணும் பொங்கல் அன்று வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 101 டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 20 லட்சத்துக்கு மது, பீர்வகைகள் விற்பனையாகின. சாதாரண நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடிக்கு கூடுதலாக மது, பீர்வகை கள் விற்பனையாகின என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 19, 2026

வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் 37 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 உழவர் சந்தைகளில் தை மாத அமாவாசையொட்டி நேற்று (ஜனவரி 18) ஒரே நாளில் 101 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 37 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 19, 2026

வேலூர்: முதியவரை முட்டி தூக்கிய மாடு!

image

அணைக்கட்டு அருகே கோவிந்த ரெட்டிப்பாளையத்தில் நேற்று (ஜன.18) எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக திலகர் என்ற முதியவர் மீது மாடு முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

News January 19, 2026

வேலூர்: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

வேலூர் CMC டாக்டரால் அவலம்!

image

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பெல்கிங் என்பவருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ந் தேதி வேலூருக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போது இவரது அறையிலிருந்து 36 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விடுமுறையில் பெங்களூரு சென்ற பெல்கிங் தலைமறைவானார். தற்போது போலீசார் பெல்கிங்கை தேடி வருகின்றனர்.

News January 19, 2026

வேலூர்: கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவி பலி!

image

கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் தினகரன் (29). இவரது 3 மாத கர்பிணி மனைவி தீபிகா (22). இவர்கள் நேற்று (ஜன.18) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கிங்கினி அம்மன் கோவில் அருகே பின்னால் வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தினகரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 19, 2026

வேலூர்:காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (ஜன-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 19, 2026

வேலூர்:காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (ஜன-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!