India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன்.8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 170 லிட்டர் கள்ளச்சாராயம், 3150 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 88 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 24 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜுன் 8) வெயிலின் தாக்கம் குறைந்து 94.8°F பதிவானது. மேலும் தற்போது மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகளுக்கான படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதது, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1552 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, 2,045 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (30) கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர், வேலூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அப்துல்லா புரத்தில் இருவரும் இன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சிவகுமார் தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அர்ஜுன் கழுத்தில் குத்தி விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான இலவச பஸ்-பாஸ் சலுகை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2023-2024ல் வழங்கப் பட்ட பழைய பஸ்-பாஸ் அல்லது பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணித்துக் கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 7) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 160 லிட்டர் கள்ளச்சாராயம், 3800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 221 மதுபாட்டில்கள், 24 பீர் பாட்டில்கள், 2.500 கிலோ கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 27 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 6 மையங்களில் வரும் (ஜூன் 9)ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 36, 705 தேர்வாளர்கள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதோடு தேர்வுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 6) பேரணாம்பட்டில் அதிகபட்சமாக 43.40 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூரில் 7.10 மிமீ மழையும், குடியாத்தம் மோர்தனாவில் 32.00 மிமீ, கே.வி.குப்பத்தில் 4.2 மிமீ, காட்பாடியில் 5 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 163.20 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 10.06.2024 முதல் 01.07.2024 அன்று வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1,78,500 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 267 மாணவ மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களின் 41 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். மருத்துவ படிப்புக்கான தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இந்த மாணவர்கள் தகுதிபெற்றனர் . அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை பேருக்கு சீட் கிடைக்கும் என்ற விவரம் மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு பிறகு தெரியவரும் என்று கூறினர்.
Sorry, no posts matched your criteria.