India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக மேலாண்மையியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் பத்மினி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் மொத்தம் 14,543 லிட்டர் சாராயம் மற்றும் ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாஜக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, வேலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி பெருமாள் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று சமீபத்தில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை தலைமைச் செயலகத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர்
விசுவநாதன் மற்றும் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய இறப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருட்கள் விற்பனை கண்காணிக்கப்பட்டு முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 12 உதவி ஆய்வாளர்கள் உள்பட 27 காவலர்களை பணி இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காட்பாடியில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் மணிமேகலை லத்தேரிக்கும் , வேப்பங்குப்பத்தில் பணியாற்றி வரும் லட்சுமி அணைக்கட்டுக்கும் இவர்கள் உள்பட மொத்தம் 27 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் உள்ள சதுப்பேரி ஏரியினை சீரமைக்க 19 கோடி, காட்பாடி மாதாண்ட குப்பம் ஏரி மறுசீரமைக்கும் பணிக்கு 1 கோடியே 30 லட்சம், தாராபடவேடு ஏரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 5 கோடி, குடியாத்தம் கவுண்டன் மகாநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க 8 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.