India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று ஜன.25 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 26) வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் லட்சுமணன், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

வேலூர் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்புசெட்டு மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்பித்து பயனடையலாம். ஷேர்!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜன.26) தேதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதன்படி காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கரசமங்கலம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் வல்லம் மற்றும் அரியூர் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <

வேலூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <

பள்ளிகொண்டாவில் 72-ம் ஆண்டாக நேற்று (ஜன.25) காளை விடும் விழா நடந்தது. இதில் 255 காளைகள் கலந்து கொண்டன. விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. மேலும் விழாவில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

வேலூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.25) காய்கறி விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.20, உருளை ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.26, மிளகாய் ரூ.55, வெண்டை ரூ.40, கத்திரிக்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.30, தேங்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.15, பீன்ஸ் ரூ.40, அவரை ரூ.30, கேரட் ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.