Vellore

News June 25, 2024

வேலூரில் செவிலியர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர்கள், கிராம பகுதி செவிலியர் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று, காலி பணியிடங்களை உடனே நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

வேலூர்: வணிகர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

image

வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இல்லை. வணிகர்கள் மற்ற நாணயங்களை வாங்க நினைத்தாலும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். அரசு பஸ்கள், ஆவின் பாலகங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

News June 25, 2024

வேலூர்: போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

image

குடியாத்தத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

News June 24, 2024

குறைதீர்வு கூட்டத்தில் 658 மனுக்கள் குவிந்தது

image

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக 658 மனுக்கள் பெறப்பட்டதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

News June 24, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள கிறித்துவ தேவாலயங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ள கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று ஜூன் (24) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

image

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தற்போது ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதோடு சுமார் 50க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News June 23, 2024

வேலூர் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம்

image

வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில்  அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இன்று (ஜூன் 23) முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

News June 23, 2024

சட்ட விரோதமாக மது விற்பனை: 4 பேர் கைது

image

காட்பாடி, விருதம்பட்டு மற்றும் திருவலம் பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் இன்று கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது சேனூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன், வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன், வள்ளிமலை சந்திப்பு பகுதியை சேர்ந்த சம்பத், ஜங்கலபாடியை சேர்ந்த மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 70 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News June 23, 2024

மாமுல் கேட்டு மிரட்டிய நபர் கைது

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி (45). இவர் முள்ளிப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரிடம் சரத்குமார் என்பவர் மாமூல் கேட்டு நேற்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிவகாமி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இன்று (23.06) அளித்த புகாரின் பேரில் சரத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!