India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.

காட்பாடியை சேர்ந்தவர் ராஜம்மாள் (64). இவரிடம் அரசு ஓய்வு ஊதியத்தை அதிகப்படுத்தி தருகிறேன் என கூறி போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 6 கிராம் தங்க நகையை கழட்டுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட தேவமகேஷை (43) கைது செய்தனர்.

கே.வி குப்பம் அடுத்த கீழ் விளாச்சூர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று (ஜன.26) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஹேமந்த் குமாரை கைது செய்தனர்.

வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். உடனே SHARE பண்ணுங்க.

வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வரதராஜன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நேற்று (ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது 85 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அபாரதம் விதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட அறிவியல் மையம் பொறுப்பாளராக பணிபுரிபவர் சதீஷ் குமார். இந்த மையத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணுக்கு சத்தீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜன.26) நடத்தப்பட்ட சோதனையில் 273 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் எச்சரித்துள்ளார்.

குடியாத்தத்தை செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் தளபதி (18). மதுபோதைக்கு அடியாக இருந்த இவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த வாலிபர், நேற்று (ஜன.26) இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 26 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.