Vellore

News February 4, 2026

தனியார் பல்கலைக்கழகத்தில் உழவர் சங்கமம் நிகழ்ச்சி

image

காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நாளை (பிப்ரவரி 05) வேளாண் கல்லூரி சார்பில் உழவர் சங்கமம்-2026 முன்னிட்டு 2-நாள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பங்கேற்கிறார் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

சாலை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்!

image

காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் 850 மீட்டர் அளவில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (பிப்.4) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

News February 4, 2026

வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

வேலூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

வேலூரில் 15,200 பழச்செடி தொகுப்புகள் விநியோகம்

image

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சீதா ஆகிய பழச்செடிகள் இருக்கும். இதுவரை 15,200 பேருக்கு மானியத்துடன் பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 4, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News February 4, 2026

வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

image

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.

News February 4, 2026

வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

வேலூரில் தொரப்பாடி, வடுகந்தாங்கல், சத்துவாச்சாரி, கார்ணாம்பட்டு துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, அரியூர், தொரப்பாடி சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும்.

News February 4, 2026

வேலூரில் நள்ளிரவில் பயங்கரம்!

image

குடியாத்தத்தில் இருந்து மினிவேன் ஒன்று நேற்று இரவு (பிப்.3) ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்துல்லாபுரம் அருகே சாலையை பெண் ஒருவர் கடக்க முயன்றார். இதை பார்த்த டிரைவர் பிரேக் போட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் அப்பெண் சிறு காயங்களுடன் தப்பினார். பின்னர் வேன் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

error: Content is protected !!