India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. இதில் 75க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் <
சென்னையில் நேற்று நடந்த மாநில அளவிலான 16 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட கராத்தே போட்டியில், கீழ்மனவூர் ஆவாரம்பாளையம் பகுதியை சார்ந்த வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு (ஆகஸ்ட் 25) ரோந்து பணி செல்லும் காவல்துறை அதிகாரிகளின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் வாசுகி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்- 9498160655.
திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று மாலை (ஆகஸ்ட் 25) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், தனியார் திரையரங்கில் புதிதாக தமிழில் வெளியாகியுள்ள “கடமை” திரைப்படத்தின் இயக்குனர் சுக்கிரன் சங்கர் இன்று பொதுமக்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். மேலும், சிறிய தயாரிப்பில் வெளிவரும் படங்களை பொதுமக்கள் பெரிதளவில் ஆதரிக்கின்றனர் என்றும், சிறிய படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருந்தால் பொதுமக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
குடியாத்தம் அருகே சொத்து பிரச்சனையால் சொந்த தம்பியை குத்திக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவியரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது கவியரசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 25) மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூரில் வேளாண்மைத்துறையின் கீழ் தமிழக முதல்வர் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரபீ பருவத்தையொட்டி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வரை வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலூர் குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை அதிகாரிகளின் தகவல்களை வேலூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. குடியாத்தம் நகர காவல் நிலையம், பேர்ணாம்பட்டு காவல் நிலையம், மேல்பட்டி காவல் நிலையம், கே. வி. குப்பம் காவல் நிலையம், பரதராமி காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண் 9442020547
Sorry, no posts matched your criteria.