India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த யுவகுமார் (22). இவர் நேற்று (பிப்.15) நண்பர்களுடன் பைக்கில் மக்கான் சிக்னல் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி யுவகுமார் படுகாயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மலையை சேர்ந்த சிறுமி (14) குடியாத்தத்தில் உறவினர் வீட்டில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். வயிற்று வலியால் துடித்த சிறுமியை தி.மலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பது தெரியவந்தது. இதில் குடியாத்ததை சேர்ந்த கமலேஷை (23) போலீசார் கைது செய்தனர். தற்போது காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை நாளை (பிப்ரவரி 16) காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (பிப்ரவரி 16) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. வேலூரின் பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலாற்றில் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி வேலூர் எஸ்பி சிவராமன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் ஒலிம்பிக் 2026 மற்றும் கஹேலோ இந்தியா 2026 முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட பாஜக விளையாட்டுப் பிரிவு மற்றும் ‘நமோ இளைஞர் அறக்கட்டளை’ சார்பில் இன்று (பிப்.15) காலை மராத்தான் போட்டி நடைபெற்றது. இதை பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் தசரதன் விநாயகம், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர் .

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று (பிப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களுக்கு பணிகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி வரும் 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி குடியாத்தம் BDO சத்திய மூர்த்தி வட்டார ஊராட்சிக்கும், வேலூர் BDO வின்சென்ட் ரமேஷ் பாபு குடியாத்தத்துக்கும், பேரணாம்பட்டு BDO சதீஷ்குமார் வேலூருக்கும் என மொத்தம் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.