India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று (பிப்.18) நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் (DCRB) தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வசந்தபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணியின் கீழ் கழிவு நீரேற்று நிலையம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 18) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, வேலூர் EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<

வேலூரில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் நேற்று (பிப்.17) கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டாா். சேலத்தைத் தொடா்ந்து, தற்போது வேலூரின் அகரம்சேரியில் தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பதை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி துணைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறைகளை சேர்ந்த 179 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 87 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூரில் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் கழிஞ்சூர் தேர் நிலை சரிந்து கவிழ்ந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று (பிப்.17) கழிஞ்சூர் விழா குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தார். அரசின் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக விழா குழுவினர் 27 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.