Vellore

News February 19, 2026

வேலூர்: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

வேலூர்: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

வேலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

வேலூர்: இன்றைய நெல் விலை நிலவரம் வெளியீடு

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்று (பிப்.19) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1311 – 2229 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1260 முதல் 2199 வரையும், நர்மதா ரூ.2140, மணிலா (80 கிலோ) ரூ.8869 முதல் 9000 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.135 முதல் 156 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News February 19, 2026

வேலூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

வேலூர்: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா? கவனம்!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

வேலூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

image

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News February 19, 2026

வேலூரில் அதிகாரிகள் அதிரடி!

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 19, 2026

வேலூரில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

image

ஒடுகத்தூர் அகரம் பகுதியை இரு தரப்பினர் இடையே முன்பகை காரணமாக நேற்று (பிப்.18) காலை பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் 1 பெண் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வன் படுகாயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.

News February 19, 2026

வேலூரில் அரங்கேறிய கொடூரம்!

image

கே.வி.குப்பத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி உடல் நிலை சரி இல்லாததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் போளூரை சேர்ந்த உறவினர் ஜெயபிரகாஷ் (39) மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குடியாத்தம் மகளிர் போலீசார் நேற்று இரவு ஜெயபிரகாஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

error: Content is protected !!