India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

வேலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்று (பிப்.19) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1311 – 2229 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1260 முதல் 2199 வரையும், நர்மதா ரூ.2140, மணிலா (80 கிலோ) ரூ.8869 முதல் 9000 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.135 முதல் 156 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடுகத்தூர் அகரம் பகுதியை இரு தரப்பினர் இடையே முன்பகை காரணமாக நேற்று (பிப்.18) காலை பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் 1 பெண் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வன் படுகாயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.

கே.வி.குப்பத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி உடல் நிலை சரி இல்லாததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் போளூரை சேர்ந்த உறவினர் ஜெயபிரகாஷ் (39) மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குடியாத்தம் மகளிர் போலீசார் நேற்று இரவு ஜெயபிரகாஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.