Vellore

News September 9, 2024

வேலூர் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

வேலூர் மாநகரின் இன்று (செப்டம்பர் 9) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாதுகாப்பு பணியில் ‌எஸ். பி.மதிவாணன் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 1,072 காவலர்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 150 ஊர்காவல் படையினர் என மொத்தம் 1300 ‌ போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

வேலூர் அருகே நாளை மின்தடை 

image

பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணாம்பட்டு நகரம், பாலூர், ஓம்குப்பம் , கொத்தூர், குண்டலப்பல்லி , சாத்கர், ஏரிகுத்தி , எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி , பல்லாலகுப்பம் , அரவட்லா ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என குடியாத்தம் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

வேலூரில் 1000 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.

News September 9, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 8) நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News September 8, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 8, 2024

குடியாத்தம் அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

image

குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிக்காக வந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குடியாத்தம் அரசு மருத்துவர் பாபுவை நேற்று முன்தினம் திருச்சியில் உறவினர் வீட்டில் வைத்து குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி மருத்துவர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 55 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 55 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் மத்திய சிறை டிஐஜி மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் உள்பட 14 பேர் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக கொடுமை செய்துள்ளனர். கைதி சிவகுமாரின் தாய் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

News September 7, 2024

வேலூர் எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மெயின்பஜார், கிருபானந்தவாரியார் சாலை, மாங்காய்மண்டி வரை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி, விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதையில் அன்றைய தினத்தில் எவ்வித கடைகளும் வைக்க கூடாது என்று வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!