Vellore

News September 11, 2024

வேலூர் குறைதீர் கூட்டத்தில் 38 மனுக்கள் பெறப்பட்டது

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று ( செப் 11) நடந்தது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் சந்திரதாசன் ஆகியோர் தலைமையில் நடந்த குறைதீர்க்க கூட்டத்தில் 38 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 11, 2024

வேலூர் சிறைத்துறை டிஐஜியிடம் சிபிசிஐடி விசாரணை

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும்  4.25 லட்சம் திருடிய வழக்கில் கைதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் சென்னை சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 11) விசாரணையை தொடங்கி உள்ளனர்.

News September 11, 2024

வேலூரில் அமைச்சர் கூறிய தகவல்

image

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பின்னர் நிருபர்களிடம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்.இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு உள்ளது.நம் நாட்டின் ஐஸ்கிரீம் நல்ல தரத்தில் உள்ளது என தெரிவித்தார்.

News September 11, 2024

வேலூரில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் கிடையாது

image

வேலூர் முத்துமண்டபம், அல்லாபுரம், சத்துவாச்சாரி ஆகிய இடங்களில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று செப்டம்பர் 11 முதல் 13 வரை வேலூர் மாநகராட்சி குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க இயலாது. எனவே பொதுமக்கள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள என கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

News September 11, 2024

வேலூருக்கு வருகை தந்த ஆளுநர்

image

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்தினருடன் நேற்று (செப்டம்பர் 10) ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அவர், சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

வேலூர் மாவட்டத்தில் “உயர்வுக்கு படி”முகாம் கலெக்டர் பங்கேற்பு

image

வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் பகுதியில் இன்று (செப்டம்பர் 11) தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் “உயர்வுக்கு படி”முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

வேலூருக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வருகை

image

வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டி ஐ ஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு விரைந்தனர். சேலம் மத்திய சிறையில் இன்றும், வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

News September 10, 2024

வேலூர் அஞ்சல் துறை அறிவிப்பு

image

வேலூர் கோட்ட அஞ்சல் துறை குறைதீர்வு கூட்டம் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் 13-ஆம் தேதிக்குள் அஞ்சல் கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

News September 10, 2024

வேலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

image

வேலூரில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (11-09-2024) நடைபெற உள்ளதால் புதிய,பழைய பஸ் நிலையம்,பைபாஸ் சாலை,தோட்டப்பாளையம்,வேலூர்டவுன், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், இறைவன்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான வல்லண்டராமம், விரிஞ்சிபுரம் , இறைவன்காடு அதன் சுற்றயுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

News September 10, 2024

காட்பாடி விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!