India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை அக்டோபர் 27 நடைபெற உள்ளது பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்.பி.மதிவாணன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் 5 டி.எஸ்.பி, 13 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600 போலீசார் பாதுகாப்பு பணிக்காக இன்று புறப்பட்டு சென்றனர்.
வேலூர் காகிதப்பட்டறை சேர்ந்தவர் சஞ்சய் (20) இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்ட ரங்காபுரத்தில் இருந்து பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் வழியாக செல்லும் போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தத்தில் நாளை அதிமுக சார்பாக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் இருந்து 15 % உயர்த்தி வழங்கவும், பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து நாளை காலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்இ தேர்வு (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு) நாளை (அக்டோபர் 26) நடக்க உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் சாந்திநிகேதன், ஹோலிகிராஸ், கே.ஏ.கே. எம், தோட்டபாளையம், கொணவட்டம் உட்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மதியம் இரு வேளைகளில் நடைபெறுகிறது. காலையில் 1764 பேரும், மதியம் 9 பேரும் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளை பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் அக்டோபர் 28-ம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (அக்.25) இன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கள பிரச்னைகளை கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
வேலுார் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சீதா, கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் எஸ்ஐ குமார், சத்துவாச்சாரிக்கும், பாகாயம் எஸ்ஐ தென்னரசி, வேலூர் வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் என மொத்தம் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மறைந்த ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாளை (அக்டோபர் 25) கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே மோட்சதீபம் ஏற்றப்பட உள்ளது என ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் அன்பு நெஞ்சங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 24) காட்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்படும் நேரத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து இன்னும் சற்று நேரத்தில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.