Vellore

News November 1, 2024

வேலூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நவ-12 ஆம் தேதி காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் வழங்கி பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 31) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 28 மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மழை வருமா?.

News October 31, 2024

அதிமுக மாவட்ட செயலாளர் தீபாவளி வாழ்த்து

image

வேலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் வேலழகன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று (அக்.31) தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அனைவரது வாழ்விலும் இருள்நீக்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

வேலூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு

image

தீபாவளியையொட்டி வேலூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய, புதிய பஸ் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், மாநில எல்லை சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 31, 2024

வேலூர் மக்களே பாதுகாப்பாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேலூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 30) நடத்திய சோதனையில் 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News October 30, 2024

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் நாளை சிறப்பு பூஜை

image

உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் நாளை அக்டோபர் 31-ம் தேதி கோயில் வளாகத்தில் 10,008 அகல் விளக்கில் ஸ்ரீ சக்கர வடிவில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 30, 2024

கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவி: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட உள்ளது என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் வேலூர்-ஆற்காடு சாலையில் இயங்கி வரும் தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

தீபாவளிக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

image

வடமேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், 51 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையொட்டி, இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்கு 24 மணி நேரமும், 600க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!