Vellore

News November 3, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.03) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டிருந்தன. இதில், 2 பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல் மேலேயுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மற்றும் தகவலுக்கு மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

வேலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்கம்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் 27 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று (நவம்பர் 3) நடந்தது. இந்த போட்டியை விஐடி துணை தலைவரும், வேலூர் மாவட்ட கைப்பந்து அமைப்பின் பெருந்தலைவருமான ஜ.வி.செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் 27 மாவட்டங்களை சேர்ந்த 582 பேர் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

News November 3, 2024

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பைக்குகள் திருட்டு

image

வேலூர் மாவட்டத்தில் பைக் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் நேற்று (நவ.2) ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவாகியுள்ளது. வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் 1 வழக்கும், அணைக்கட்டு 1, சத்துவாச்சாரி 1, குடியாத்தம் டவுன் 15, கே வி குப்பம் 4, மேல்பாடி 1, என மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் திருட்டுகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News November 3, 2024

பரோல் முடிந்து வேலூர் சிறைக்கு திரும்பிய கைதிகள்

image

தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 21 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 28ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் 9 பேர் நேற்று வேலூர் சிறைக்கு திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள 12 கைதிகள் இன்றும், நாளை மாலைக்குள் சிறைக்கு திரும்ப உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 3, 2024

தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 40 ஆயிரம் பேர் பயணம்

image

தீபாவளி பண்டிகை கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக வேலூர் மண்டலத்தில் 148 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வேலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. 3 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு பஸ்களில் 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 3, 2024

காட்பாடி ரயில் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

image

காட்பாடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி இப்ராஹிம் ஷெரிப் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினருடன் ரயில்வே போலீசார் மற்றும் வெளிமாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருவதால் கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் எனகூறினார்.

News November 3, 2024

 132 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன

image

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 110க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிரசவத்துக்கு பயன்படுத்தும் போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்சிலேயே குழந்தைகள் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 132 குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 2, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவம்பர் 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இதில் 2 பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News November 2, 2024

வேலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 2) நடத்திய சோதனையில் 60 மது பாட்டில்கள், 5 லிட்டர் கள், 4.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 6 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

error: Content is protected !!