India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாநகராட்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இத் தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர். இதில் அடையாள அட்டை பெற்ற 2,148 சாலையோர வியாபாரி–ளில் 918 பேர் வாக்குகள் செலுத்தினர். இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டி சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடந்தது. இதில் 4 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர் 24) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர் 25) காலை 9:30 மணி அளவில் பாகாயம் அருகே உள்ள மலைப்பகுதிகளில், குடியாத்தம் உள்ளி மலைப்பகுதியில் 5 லட்சம் விதை பந்துகள் தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498146020
வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வேலூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரில் இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் ராஜா என்கிற வசூர்ராஜா (வயது 36). ரவுடியான இவர் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வசூர்ராஜா வழிப்பறி வழக்கில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்திற்கு நேற்று கோவையில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் வேனில் வேலூர் அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் (அக்டோபர்) 9அம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(47). இவரிடம் 30 லட்சம் பணம் கேட்டு சிலர் மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் தற்கொலைக்கு தூண்டியதாக புது வசூரை சேர்ந்த விக்ரம் (32), அருண்குமார் (22), நரேஷ் (35), இம்தியாஸ் (32), திலீப் (34) ஆகிய 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் டவுன் ரயில் நிலையம் பின்புறம் உள்ள சம்பத் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (28). இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பெயரில் தாமோதரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (செப்டம்பர் 23) உத்தரவிட்டார்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறை வாசிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களை காண முன்பதிவு செய்ய 9042828723, 9345470409 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் எந்த நேரத்தில் பார்க்க வரலாம் என்பது குறித்து பதிவு செய்து தெரிவிக்கப்படும். இதில், குறிப்பாக 10 ஷிப்டுகளில் அளிக்கப்பட்டுள்ளது மேலும், நேர் காணல் வருபவர்கள் 45 நிமிடத்துக்கு முன்னதாக வரவேண்டும். என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.