India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜனஷிக்சா கலாலயம் சார்பில் போதை பொருள் தடுப்பு, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (அக்டோபர் 2) மாலை 5 மணி அளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 15,000 மாணவ மாணவிகள் பங்கு பெறும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், கல்லூரியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு சான்று மற்றும் உரிமம் அனைத்து ஆவணங்களுடன் வருகிற 10-ஆம் தேதிக்குள் http://tnswp.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறும் மற்றும் உரிமம் பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் சிறையில் சென்னையை சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி தீபிகா நேற்று மாலை சிறையில் தனது கணவரை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த தீபிகா சிறையில் தனி அறையில் எனது கணவரை அடைத்து சித்ரவதை செய்கின்றனர். கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்கு ஜெயிலர் ஒருவர் 1 லட்சம் கேட்பதாகவும், இல்லையென்றால் என்கவுண்டர் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என கூறினார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 20 லிட்டர் கள்ளச்சாராயம், 217 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட சார் பதிவாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் வேலூர் மாவட்டம் கணியம்பாடிக்கு சார்பதிவாளர் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (அக்டோபர் 1) உத்தரவிட்டுள்ளார். இவர் உள்பட தமிழ்நாட்டில் 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் பொறுப்பு ஏற்று கொள்ள உள்ளனர். என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை காந்தி ஜெயந்தி முன்னிட்டு காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது மாற்றுத்திறனாளிக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பள்ளிகள், கல்லூரிகள் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளார். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் பயனடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லை மற்றும் சுங்கச்சாவடிகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் அக்.9ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மோட்டார் வாகனப்பிரிவு எஸ்.ஐ.யை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் தனி தாசில்தாராக பணியாற்றிய (நடுவர் தீர்ப்பாயம்) வடிவேலு, பேரணாம்பட்டு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரணாம்பட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த கலைவாணி, பணியிட மாறுதலை ரத்து செய்து, அதே பணியிடத்தில் நியமனம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.