India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் https//www.aneney.to.0y.h என்ற இணையதளம் (online) வழியாக அல்லது “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் 19.10.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (அக்டோபர் 4) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 86 மதுபாட்டில்கள், 1130 ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் “தேசிய நல்லாசிரியர் விருது” பெற்ற வேலூர் மாவட்டம் இராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் இரா.கோபிநாத், தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக ரோகிணி தேவியை நியமனம் செய்துள்ளது. தற்போது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக (பொறுப்பு) ராஜவேலு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் வேறு உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றால் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர், மாணவிகள் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
காட்பாடி தாராபடவேடு பாறைமேடு பகுதியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி , மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 2) நடத்திய சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், 20 லிட்டர் கள்ளச்சாராயம், 232 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் நேற்று கடைகளில் குடிமகன்கள் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கினர். இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 103 கடைகளில் வழக்கமாக 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5.25 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.