India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. அந்த வகையில், அணைக்கட்டு MLA ஏ.பி.நந்தகுமார், தனது தொகுதியில் ஆய்வு செய்வது, பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவது, வாக்கு சேகரிப்பு என பம்பரமாக சுழன்று வருகிறார். ஏற்கனவே வேலூரில் விஜய் ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்றுள்ள நிலையில், மற்ற கட்சி நிர்வாகிகள் தங்களை காப்பாத்திக்கொள்ள துடிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் என்பவரை சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரை சேர்ந்த ராஜேஷ் (26) என்ற வாலிபர் கொலை செய்தார். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று (மார்ச்.04) ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் விசேஷமாக நடைபெறும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account-க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

வேலூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், தஞ்சையில் உள்ள செங்கிப்பட்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தவெக தலைவர் விஜய் ”நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே” என கூறியுள்ளார். கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ”இதை சொல்ல மறந்துட்டேன், SORRY” எனக் கூறி, இன்று தஞ்சாவூரில் கூறியுள்ளார்.

வேலூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.