Vellore

News October 23, 2024

வேலூர் சிறையில் 25 பேர் பரோல் கேட்டு மனு

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாட 25 பேர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மனுக்கள் மீது சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பரோல் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

News October 23, 2024

வேலூர் சோதனை சாவடியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை

image

தமிழக-ஆந்திர மாநில எல்லை பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று (அக்டோபர் 23) அதிகாலை விஜிலன்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத rஊ. 1.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News October 23, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

வேலூர் மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சமி தலைமை வகித்தார். திருநங்கைகள் படித்தாலும் உரிய வேலை கிடைப்பதில்லை என்பதால் மற்றவர்கள் படிக்கவே தயக்கம் என்று நடைபெற்ற சிறப்பு முகாமில் வேதனை தெரிவித்தனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனு அளித்தனர்.

News October 23, 2024

வேலூர் சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

image

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை தாக்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை நேற்று (அக் 22) சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கும் மற்ற இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

News October 23, 2024

வேலூர் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று  (அக்டோபர் 22) நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா திருநங்கைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 23, 2024

வேலூர் மாவட்டத்தில் 28 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 22) நடத்திய சோதனையில் 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் இது தொடர்பாக ஒருவர்  மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் இசையமைப்பாளர் தேவா

image

வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவா இன்று (அக்டோபர் 22) சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் சுரேஷ்பாபு பொன்னாடை அணிவித்து அவரை வரவேற்றார். பின்னர் ஸ்ரீ ஸ்வர்ண லட்சுமிக்கு ஆரத்தி காண்பித்த பிறகு சத்தி அம்மாவிடம் அவர் ஆசீர்வாதம் பெற்றார்.

News October 22, 2024

குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் 

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயது வாலிபர் ஒருவர், மாணவியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

ரூ.8.24 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவி

image

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் வேலூர் மாவட்ட தொழில்மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (22.10.2024) தொடங்கி வைத்து, 33 தொழில்முனைவோருக்கும் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் தொழில்புரிய ஏதுவாக ரூ.8.24 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார்.

News October 22, 2024

வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர் நியமனம்

image

வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளராக பார்வதி பணியாற்றி வந்தார். இவர் ஈரோடு மாநகராட்சியில் பொறியாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சதிஷ்குமார் வேலூர் மாநகராட்சியில் காலியாக உள்ள உதவி கமிஷனர் பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரு சில நாட்களில் இவர்கள் பொறுப்பேற்று கொள்வார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!