India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமா பணியாளர்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான படிவம் மற்றும் விவரங்களை வேலூர் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து. இதில் பேசிய ஆட்சியர் சுப்புலட்சுமி காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும். கேஸ் சிலிண்டர்களை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேலூருக்குட்பட்ட சாத்துமதுரை, அணைக்கட்டுக்குட்பட்ட பின்னத்துரை, காட்பாடிக்குட்பட்ட கொண்டேரிபள்ளி, குடியாத்தத்திற்குட்பட்ட பெரும்பாடி, கே.வி.குப்பத்திற்குட்பட்ட வேப்பங்கநேரி, பேரணாம்பட்டுக்குட்பட்ட எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் வருகிற 14-ந் தேதி பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் மார்ச்.12க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.