India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <

வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டம் மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (இன்று 09.03.2026) ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 126 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு. சிவராமன் உத்தரவின்படி மேற்கொண்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<

1.மாநகராட்சி: 1(வேலூர்)
2.நகராட்சி- 2 (குடியாத்தம்,பேரணாம்பட்டு)
3.பேரூராட்சிகள்- 4
4.வருவாய் கோட்டம்- 2
5.வருவாய் வட்டங்கள் – 06
6.வருவாய் கிராமங்கள்- 317
7.ஊராட்சி ஒன்றியம்- 07
8.கிராம பஞ்சாயத்து- 247
9.MP தொகுதி – 1 (வேலூர்)
10.MLA தொகுதி- காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்)
11.மொத்த பரப்பளவு – 1336.42 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மாணவரணி இணை அமைப்பாளர் மணிகண்டன், ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் நவீன், வாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருணா, பேபி லக்ஷ்மி, கவுசல்யா, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் ஓட்டேரி சந்திப்பில் பாகாயம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தொரப்பாடி சேர்ந்த பிரபு (43), சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (51) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே
Sorry, no posts matched your criteria.