India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பகுதியில் நேற்று மதியம் பர்தா அணிந்த கொள்ளையர்கள் அப்பகுதியில் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டிய போது அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பர்தாவை தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து வரும் 13-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடத்த உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்தமுகாமில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

தூத்துக்குடி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து நேற்று (மார்ச்.10) கருப்பு பேட்ஜ் அணிந்து அமெரிக்கா இஸ்ரேல் கொலை வெறி தாக்குதலை நிறுத்திடுக என்ற வசனத்துடன் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் கோவில்பட்டியில் உள்ள அனைத்து அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் கண்ணன் (28) என்பவர் கழுகுமலையில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது ஸ்டூடியோவில் புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குமார் (23) மற்றும் முத்து (20) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.