India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மாவட்டத்தில் மொத்தம் 1868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 8967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 246 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் ஏப்.6 முதல் இயங்கும். சிறப்பு ரயில் (07191/07192) நிரந்தரமாகி, தூத்துக்குடி வரை நீட்டிப்பு. காச்சிகுடா திங்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் புதன் காலை 7.40 க்கு புறப்பட்டு வியாழன் மதியம் 1.25 காச்சிகுடா வந்தடையும். (வாரம் ஒருமுறை) இதனால தென் தமிழக – தெலங்கானா பயணம் எளிதாகும்.

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர், டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை CBIக்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது. அறிவியல் பூர்வமான ஆவணங்களை சேகரித்து விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அழுத்தம் தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.