India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று ஜன.(29) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜீ(58). இவர் இன்று மாலை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக சக காவலர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு செல்லும்போது உயிரிழந்தார். இவருக்கு 2 நாட்களுக்கு முன் DSP-யாக பதவி உயர்வு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விளாத்திகுளம் வட்டம், சிப்பி குளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இறங்குதளத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தார்.
எட்டயபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜனவரி 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 7வது முறையாக மீண்டும் முதலமைச்சராகி விடலாம் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலையில் தான் உள்ளது என அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 1,571 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.26.22 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(ஜன.28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பெரியசாமிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்(35). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சக்திவேலுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.அந்த வகையில் நாளை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையில் புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்காத மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. நேற்று நள்ளிரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ராஜ் கல்லால் தாக்கி சின்னத்துரையை கொலை செய்துள்ளார். ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி ராஜை கைது செய்தனர்.
தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.இதனை செயல்படுத்தாத தூத்துக்குடி மாவட்டத்தில் 89 நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.