Tuticorin

News March 28, 2025

தூத்துக்குடியில் 46 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 46 இடங்களில் நாளை(மார்ச் 29) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர்கள் கீதாஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

News March 28, 2025

கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

தூத்துக்குடி: ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

image

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள நியூ காலனி துணை அஞ்சலகத்திலும் இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று(மார்ச் 27) தெரிவித்துள்ளார். காலை 9:30 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News March 28, 2025

இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.

News March 27, 2025

தூத்துக்குடி: இளநீரை கண்டு வியந்த ஆங்கிலேய கலெக்டர்

image

தூத்துக்குடியில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஸ்ரீ வைகுண்டம் பகுதிக்கு வந்தபோது, இளநீரை குடிக்க கேட்டுள்ளார். சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு வைத்துள்ளதால் விவசாயி தர மறுத்த போது, இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? என கேட்டுள்ளார். இளநீரை பறித்த போது அதில் 3 கொம்புகள் இருந்துள்ளது. இன்றும் அந்த இளநீர் தென்திருப்பேரை அழகிய பொன்னம்மை தாயார் உடனுறை கைலாசநாதர் கோயிலில் உள்ளது.*ஷேர்

News March 27, 2025

திருமணத்தடை நீக்கும் அம்பாள் கோயில்

image

கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன் சங்கரராம பாண்டியன், தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால், இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அன்றிலிருந்து இந்த திருத்தலத்தமானது திருமணத்தடை நீங்கவும் மற்றும் குழந்தை வரம் பெறவும் புகழ் பெற்றது. *ஷேர் செய்யவும்*

News March 27, 2025

பண்டாரவிளைக்கு அனுப்பி விடுவேன் – அர்த்தம் தெரியுமா?

image

தூத்துக்குடி, சாயர்புரம் அருகே பண்டாரவிளை பாண்டுவர் (வைத்தியர்) விளை மருவி பண்டார விளை ஆயிற்று. இங்கு கை, கால் முறிவுக்கு கட்டு போடும் வைத்தியர்கள் அதிகம் உள்ளனர். 800 வருடங்களாக இந்த வைத்தியம் நடைபெற்று வருகிறது. மன்னர்கள் காலத்தில் காயமடைந்த வீரர்கள் இந்த ஊரின் அருகே தங்கி வைத்தியம் செய்து கொள்வர். தூத்துக்குடியில் ஒருவரை கோபமாக கை காலை முறித்திடுவேன் என்பதற்கு பண்டாரவிளைக்கு அனுப்புவேன் என்பர்

News March 27, 2025

செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

image

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)

News March 27, 2025

SSLC தேர்வு: தூத்துக்குடியில் 21,994 மாணவர்கள் எழுதுகின்றனர்!

image

தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 28) SSLC தேர்வு தொடங்குகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வினை 21,994 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

News March 27, 2025

வேட்டை நாயை முயல் துரத்திய ஊர் ?

image

முன் ஒரு காலத்தில் மன்னர் ஒருவர் தென்பகுதியில் வேட்டைக்கு வந்த பொழுது அவரது வேட்டை நாயை முயல் ஒன்று துரத்தியுள்ளது. இதனை கண்ட மன்னர் ஆச்சரியமடைந்து இதுதான் வீரம் மிகுந்த பூமி என்று அங்கு தனது மக்களுடன் வசிக்க துவங்கினார். தனது மூதாதையர் பாஞ்சாலன் பெயரால் அதற்கு பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டார். இதுதான் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி உருவான வரலாறு. *ஷேர் 

error: Content is protected !!