Tuticorin

News April 4, 2025

தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

சமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

தூத்துக்குடியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தனியார் தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் 20 விற்பனை நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே<> கிளிக்<<>> செய்து ஏப்.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு செய்தியை ஷேர் செய்யவும்.

News April 3, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 3, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News April 3, 2025

தூத்துக்குடி குச்சி மிட்டாய் சுவைத்து இருக்கிறீர்களா?

image

தூத்துக்குடி என்றால் மக்ரூன் எவ்வளவு பெயர் பெற்றதோ அதைப்போல தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் நெய் குச்சி மிட்டாய் புகழ்பெற்றது. நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்டது. முந்திரிப் பருப்பு நெய் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் குச்சி மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நெய் குச்சி மிட்டாய் தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.

News April 3, 2025

கல்லூரி பேராசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

image

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் மதன்குமார் மீது இன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

செல்போன் டவர் அமைத்து தருவதாக மோசடி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில நாட்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறி மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!