Tuticorin

News March 4, 2025

தூத்துக்குடி மக்களை சுண்டி இழுக்கும் தம்மடை

image

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் தயாரிக்கப்படும் தம்மடை அலாதி சுவையானது. பணியாரம் போன்று காட்சியளிக்கும் தம்மடை ரவை, சீனி, தேங்காய் பால், முந்திரிப்பருப்பு பாதாம், பிஸ்தா ஆன கலவையை அச்சில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் மணம் ஆளை சுண்டி இழுக்க கூடியது. மிதமான சூட்டில், இதை சாப்பிட்டால் கணக்கே இல்லாமல் இறங்கும். ‘இன்னும் சாப்பிடலைன்னை உடன் காயலுக்கு வண்டிய விடுங்க’ SHARE IT

News March 4, 2025

விவசாயிகள் நில உடமை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் கிராமங்கள்தோறும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 4, 2025

ஹெட்போன் ஆபத்து: தூத்துக்குடி மருத்துவர் விளக்கம்

image

தூத்துக்குடியில் நேற்று(மார்ச் 3) நடைபெற்ற உலக செவித்திறன் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தூத்துக்குடி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் செந்தில் சுனிதா, ஒரு நாளைக்கு 80 டெசிபல் ஒலியை மட்டுமே நாம் உணர வேண்டும். அதைத் தாண்டி நாம் ஹெட்போன் போன்றவைகள் அதிக நேரம் பயன்படுத்தும்போது நமது செவித்திறன் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

News March 4, 2025

விவசாயிகள் நில உடமை பதிவு – மார்ச் 30 வரை அவகாசம்

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் கிராமங்கள்தோறும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 4, 2025

திருச்செந்தூர்: பெரிய பல்லக்கில் அஸ்திரதேவர் உடன் பெலி நாயகர்

image

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதலாம் திருநாளான நேற்று(03-03-2025) இரவு ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவர் உடன் பெரிய பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி 9 சன்னதிகளிலும் பெலி செய்து பக்தர்களுக்கு திருக்காட்சிளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News March 4, 2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்றைய (4) நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (4) காலை 10 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம் பாறை, கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11 மணிக்கு கீழ பாண்டவர் மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அதன்பின் நாலாட்டின் புதூரில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் மற்றும் மணியாச்சி ஆகிய பகுதிகளில் இன்று 03.03.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்கு 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News March 3, 2025

தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள்

image

ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிற்கு செல்வோர்கள் அங்கிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி துறைமுக சுகாதார அதிகாரிகளிடம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 3, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*

News March 3, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு..மார்ச் 15 வரை அவகாசம்!

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் நேற்று(மார்ச் 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 42,174 விவசாயிகளின் நில உடமை மட்டுமே வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யாதோர் மார்ச் 15க்குள் பதிவு செய்திடுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!