India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் நெல்லை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் வருகின்ற 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 22 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மற்றும் தீபாவளி நாளை தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மல்லிகைப் பூ கிலோ ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1000 ஆக விற்பனையாகிறது. இன்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் இம்மாதம் 12 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும் – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பிறந்த சகோதரி செல்வியின் கணவருமான, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது வலைத்தள பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
முரசொலி செல்வம் மறைவை அடுத்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது முகநூல் பக்கத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மருமகனும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரி செல்வியின் கணவருமான மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் 11, 12, 13 ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக கோயில் கடற்கரையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவுக்கு பெரும் இழப்பு. அவரது நேர்மை, சமூக அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை எப்போதும் நினைவில் இருக்கும். அவருடைய பணிவு மற்றும் எளிமையால் நான் எப்போதும் வியந்திருக்கிறேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், அவரது பரோபகார மனப்பான்மையும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbtut.in என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தபட உள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிலதா மீன்வள பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற 21ம் தேதி நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் புகையிலை வியாபாரிகளான செல்வசேகர், சதீஷ் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், 200 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.