Tuticorin

News January 5, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது அங்கு உள்ள சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

News January 5, 2026

தூத்துக்குடி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

தூத்துக்குடி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 5, 2026

தூத்துக்குடி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

தூத்துக்குடி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தி

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் வளாகத்திற்குள் வந்தால் மட்டுமே பன்னீர் இலை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் முருகன் கோயில் பெயரில் போலி சமூக தளத்தில் சிலர் கோவில் பிரசாதத்தை தங்களுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாக கூறி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 4, 2026

தூத்துக்குடி: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 4, 2026

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்யும் அதிகாரி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவை சரிவர செய்யாததாக கூறி மேல் முறையீடு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு நடத்த ராஜஸ்தானை சேர்ந்த நிபுணர் ராஜேந்திரசிங் என்பவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 4, 2026

தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தூத்துக்குடே மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க.

News January 4, 2026

தூத்துக்குடி: டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்

image

புத்தன்தருவை பகுதியைச் சேர்ந்த இமானுவேல் (25) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது அண்ணன் ஜான்சன் (34) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் மணப்பாடு அருகே சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

தூத்துக்குடி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபு (60). இவர் லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு மடத்தூர் வந்துள்ளார். லாரியை வெளியில் நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் கோபுவிடம் பணம், செல்போன் கேட்டுள்ளனர். தரமறுத்த கோபுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து சிசிடிவி அடிப்படையில் ஜெயக்குமார் (20), வேல்முருகன் (19), காமேஷ் (19) ஆகிய மூவர் கைது.

error: Content is protected !!