Tuticorin

News December 9, 2024

சக்தி மாலை இருமுடி விழா: சென்னைக்கு பகலில் ரயில்!

image

மேல்மருவத்தூரில் வரும் டிச.,15 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்.,11 ஆம் தேதி வரை தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொள்வது வழக்கம். இவர்கள் மேல்மருவத்தூர் செல்வதற்கு வசதியாக பகல் நேரத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News December 8, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச08) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 8, 2024

சமூக சேவகருக்கு ஐஐடி சார்பில் சிறப்பு விருது வழங்கல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாஸ்தாவிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லூர்துமணி என்பவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு தன்னலமற்ற சேவைகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சென்னை ஐஐடி சார்பில் இன்று அவருக்கு சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. இதில் ஐஏஎஸ் அதிகாரி கந்தசாமி விருது வழங்கினார்.

News December 8, 2024

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி

image

கயத்தாறு அருகே கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, இவரது மகன் வினோத் குமார் (23). இவர் டூவீலர் மெக்கானிக் கடையில் தினக்கூலியாக வேலைசெய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் பம்புசெட் கிணற்றில் மின் வயர் பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச07) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 7, 2024

புன்னக்காயலை சேர்ந்தவர் சிறந்த மாலுமியாக தேர்வு

image

சி லைன் குரூப் ஆண்டுதோறும் சிறந்த மாலுமிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 2024 சிறந்த கடல் மாலூமிக்கான விருது புன்னக்காயலை சேர்ந்த அன்டன் பல்தான் என்பவருக்கு கிடைத்துள்ளது. சிறந்த மாலுமியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்டன் பல்தானை அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன் கோமஸ் பாராட்டியுள்ளார்.

News December 7, 2024

விவசாயிகள் மீது தாக்குதல்: கனிமொழி எம்பி கண்டனம்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று(டிச.,7) தனது முகநூல் பக்கத்தில், பயிர்களுக்கு MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உட்பட, தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லிக்கு பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது மத்திய அரசின் இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற பலாத்காரத்தை பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். தேசத்திற்கு உணவளிப்பவர்களை லத்தி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்குவது மூர்க்கத்தனமானது என்றுள்ளார்.

News December 7, 2024

காச நோய் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைப்பு

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காசநோய் ஒழிப்பு திட்டத்தினை ஒட்டி காசநோய் இல்லாத தமிழ்நாடு என்ற 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

தூத்துக்குடி; பினாயில், ஆசிட் கலந்து குடித்து பெண் தற்கொலை

image

தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் வள்ளி (50). கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார் இவர், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று(டிச.,6) பகல் சில்வர்புரம் சாலை அருகே பினாயிலையும் ஆசிட்டையும் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2024

பினாயில் ஆசிட் கலந்து குடித்து பெண் தற்கொலை

image

தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் வள்ளி (50), கணவனை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று பகல் சில்வர்புரம் சாலை அருகே பினாயிலையும் ஆசிட்டையும் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!