India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவுர்ணமி தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலமும் சாமி தரிசனமும் செய்தனர். ஐப்பசி பவுர்ணமி அதிகாலை முதல் மறு அதிகாலை வரை நீடித்ததால், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியனர். கோவிலில் சாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். கிரிவலப் பாதை தூரத்துடன் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக,திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கண்ணமங்கலம், ஆரணி, சேவூர், ராட்டினமங்கலம், படவேடு, சந்தவாசல், வண்ணங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 97 ஏரிகள் நிரம்பி வருகினறன.
திருவண்ணாமலை மாநகர திமுக செயலாளர் ப. கார்த்திவேல்மாறன் இன்று (16.11.2024), தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி அவர்களை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார். இந்நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் எ.வ.வேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.
கார்த்திகை முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவிலில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைபுரிந்தனர். இதனால், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதுடன் திருவண்ணாமலை நகரம் முழுவதுமே மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை தாத்தா முறை கொண்ட நாகராஜ்(83) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமி இரண்டு மாதம் கர்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நாகராஜை போக்சோ வழக்கில் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. ஷேர் செய்யவும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் ஹேண்ட் பால் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதில் 15 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம். இதில் தேர்வாகும் 16 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள 21வது மாநில ஹேண்ட் பால் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேலும் தகவலுக்கு 96002 96466 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.