Tiruvannamalai

News March 17, 2026

தி.மலையில் MLA அலுவலகங்களுக்கு ‘சீல்’!

image

திருவண்ணாமலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து MLA அலுவலகங்களுக்கு நேற்று சீல் வைத்தனா். ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா்.

News March 17, 2026

வந்தவாசி அருகே பயங்கர தகராறு!

image

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (65). இவரது மகன் ஆனந்தன் (41). வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவா், தனது தாயிடம் சொத்தை எழுதி தருமாறு கூறி தகராறு செய்து, தாக்கியுள்ளார். இதில் மல்லிகா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஆனந்தனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News March 17, 2026

வந்தவாசி அருகே பயங்கர தகராறு!

image

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (65). இவரது மகன் ஆனந்தன் (41). வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவா், தனது தாயிடம் சொத்தை எழுதி தருமாறு கூறி தகராறு செய்து, தாக்கியுள்ளார். இதில் மல்லிகா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஆனந்தனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News March 17, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

தி.மலை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

தி.மலையில் 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – ஆட்சியர்

image

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இன்று (மார்ச்.16) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 அமைவிடங்களில் உள்ள 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 16, 2026

தி.மலை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1)திருவண்ணாமலை மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

தி.மலை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1)திருவண்ணாமலை மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!