India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈசான்ய மைதானத்தில் தேமுதிக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையாற்றிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்முறைகள், நிவாரண நிதி குறைவு, திமுக ஆட்சியின் குறைகள் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்து திமுக மினி எமர்ஜென்சியை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியதாவது: அமலாக்கத் துறை ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், அதன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் தெளிவாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினாா்.முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஆகிய புதிய கட்டிடங்களை இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுவாமி தரிசனம் செய்தார். உடன் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 2024 ஆம் ஆண்டு மொத்த உண்டியல் காணிக்கை ரூ.42 கோடியே 59 ஆயிரத்து 971 எனத் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டை விட உண்டியல் காணிக்கை ரூ.16 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஜூன், டிசம்பர் 2024ஆம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அருணாச்சலத்தை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்று அமெரிக்காவை சேர்ந்த பக்தர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை, வேட்டி சட்டையுடன் ராஜகோபுரத்திற்கு முன் அமர்ந்து ஓம் நமச்சிவாய என்று மந்திரத்தை கூறி வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களின் வசதிக்கேற்ப திருவண்ணாமலை, மேல்செங்கம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். தி.மலையில் விமான நிலையம் அமையுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவன் ஜெய விக்னேஷ்(4) 1 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி இந்திய புக் ஆஃப் ரெக்கார்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, பிபின் ராவாத் உள்ளிட்ட உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். பள்ளியின் சார்பாக இன்று மாணவனை தாளாளர் ஏ.எச். இப்ராஹிம், பள்ளி நிர்வாக இயக்குநர் சாசியா பர்வின் ரியாஸ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.