India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வூதியர்கள், ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செய்யாறு சிறிய விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகள் சிலம்பம் போட்டி 14,17,19 ஆகிய வயது வாரியாக நடைபெற உள்ளது. இதில் முதல் 3-இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை திருவண்ணாமலை உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை பொதுமக்கள் குறைந்த விலையில் பெற்று பயன்பெறும் வகையில், முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்புவோர் வரும் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பார்வையிட்டனர். அப்போது கோயில் குருக்கள் பல்வேறு சிற்பங்களை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கங்களை அளித்தனர். அதைக் கண்டு ரஷ்ய நாட்டு பக்தர்கள் வியப்படைந்தனர். திருவண்ணாமலையில் உள்ள அதிசயங்களை காண பல்வேறு இடங்களுக்குச் செல்ல உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நேற்று அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வழக்கறிஞர்கள் கூட்டு குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று போளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனர்.
வந்தவாசி நகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு பாடசாலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், ஆரணி எம்பி தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். உடன் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள்.
தி.மலை மாவட்டத்தைச் சோ்ந்த 8,10,பிளஸ்-2,கல்லூரி கல்வி சான்றிதழ்,பொறியியல்,ஐ.டி.ஐ.,பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு கடவுச்சீட்டு அளவு புகைப்படம்,குடும்ப அட்டை,ஆதாா் அட்டை,சாதிச்சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.