Tiruvannamalai

News February 28, 2025

மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதல்; வாலிபர் பலி

image

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் கெங்கை சூடாமணி கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆந்திர பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ் திடீரென மோட்டார் சைக்கில்மீது மோதி, பின்னர் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.<> ஷேர் பண்ணுங்க<<>>

News February 28, 2025

கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை

image

வந்தவாசி அருகே மழையூர் கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் இருவர், கத்தியால் மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பினர். வீட்டின் மாடி கதவு வழியாக புகுந்து, வீட்டிலிருந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வினோதினியிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்டன. வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

திருவண்ணாமலையில் கழிவுநீர் தொட்டியில் ஆண் பிணம்

image

திருவண்ணாமலை அண்ணாநகர் 9வது தெருவில் காலிமனையில் உள்ள கழிவு நீர்தொட்டியில் ஆண் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை டவுன். போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தபேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை அண்ணாநகர் 10வது தெருவை சேர்ந்த அஸ்லாம் என்பது தெரியவந்தது.

News February 27, 2025

மண் உண்டால் பிணி போக்கும் ரேணுகாம்பாள் திருக்கோயில்

image

தி மலை போளூர் அருகே படவேட்டில் அமைந்துள்ளது அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.மற்ற அம்மன் கோயிலில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.ஆனால் இங்கு வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.பிணி, வயிற்று வலி நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்

News February 27, 2025

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

image

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.

News February 27, 2025

குறுந்தகவல் அனுப்பியவருக்கு அடி-உதை

image

செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல் (31). இவர் அடுத்தவரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் தனது சகோதரருடன் கூழமந்தல் பள்ளிவாசல் அருகே ரசூலிடம் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டு அடித்து உதைத்தனர். காயம் அடைந்த ரசூல் தூசி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 27, 2025

திருவண்ணாமலை கோயிலில் அனிருத்

image

தென்னிந்திய சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். தமிழில் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று, மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். சிவராத்திரியையொட்டி கோயிலில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இருந்தபோதிலும், பொறுமையாக வரிசையில் நின்று வழிபட்டார்.

News February 26, 2025

சுகப்பிரசவத்தை நடத்தி தரும் வாலீஸ்வரர் திருக்கோயில்

image

தி.மலை, வெம்பாக்கம் அருகே குரங்கணில்மூட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பாவ விமோசனம், ஞானம், அறிவுத்திறன் வளரவும் சனி தோஷம் நீங்கவும் இங்கு வழிபடலாம்.பெண்கள் இங்கு அம்பாளுக்கு வளையல் போட்டு,பின் அதனை அணிந்து கொள்வதால் புத்திரபாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.மேலும் இங்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

News February 26, 2025

சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டல்

image

தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பழனியம்மாள் மற்றும் 18 வயதுடைய பெண் ஆகியோர் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மற்றும் சிறுவனை ஆபாசமாக படம் எடுத்துத்து, இதனை வெளியிடாமல் இருக்க ஒரு பவுன் நகை கேட்டு இரண்டு பெண்களும் சிறுமியிடம் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்ன்றனர்.

error: Content is protected !!