India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேல்செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் விபத்துகள் நடைபெறுவதால் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகியும் மின்விளக்கு எரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அக்னிவீர் வாயு (இந்திய விமானப்படை) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு அக்டோபர்18 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது. ஜூலை 8 முதல் 28ஆம் தேதி வரை http://agbuoatgavayu.cdac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம், சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு முத்திரை சொத்துக்கள் சந்தை மதிப்பு வருவாய் கிராமங்கள் வாரியாக தி.மலை மாவட்டத்தில் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருப்பின் மதிப்பீட்டு குழுவிற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் தங்கியிருந்து போதை பொருட்களை பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பெரும்பாலான கடை விற்பனையாளர்கள் பூக்கள், அர்ச்சனை பொருட்கள் மற்றும் இதர தேவைக்கு பிளாஸ்டிக் பைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதை முற்றிலும் ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இன்று(ஜூன் 13) கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கம் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது கட்டாய கல்வி சட்டம் ஆர்டிஐ மூலம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை விட 5 மடங்கு கேட்டுள்ளனர். இதனை கண்டித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குப்பநத்தம் போளூர் சந்திப்பு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து செங்கம் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று (13.06.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர், மாவட்டக் அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ மாவட்ட எல்லையில் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று விசாரித்தாா் .
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9: 00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நல்லவன்பாளையம், தேனி மலை, அண்ணாநகர், எடப்பாளையம், வேல் நகர், கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.