Tiruvannamalai

News August 28, 2024

24-வது கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று ஜமுனாமரத்தூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் 24-வது கோடை விழா நடைபெறவுள்ளயொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 27, 2024

வந்தவாசி அருகே கண்பார்வையற்ற பெண் பாலியல் வன்கொடுமை

image

வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்பார்வையற்ற 23 வயது பெண்ணை நேற்று வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.அப்போது கூச்சம் போட்ட பெண்ணால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வந்தவாசி போலீசார் குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 27, 2024

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குகான விருது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரா்கள் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். உரிய விண்ணப்பம் நவ.30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News August 27, 2024

செங்கத்தில் பால்வினை நோய் விழிப்புணர்வு

image

செங்கம் தோக்கவாடி பகுதியில் தமிழ்நாடு எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து நடமாடும் வாகனங்கள் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழ்நாடு எச்ஐவி எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு கலைக்குழுவினரின் மூலம் மக்களுக்கு ஆடல் பாடலுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் முன்னிலையில் இன்று நடத்தினர்.

News August 27, 2024

திருவண்ணாமலையில் வழுக்குமரம் ஏறுதல், உறியடி நிகழ்வு

image

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்வு நேற்று நடைபெற்றது‌. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்வுகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 26, 2024

நிர்வாக அமைப்பாக செயலபட்ட பெரியநாயகி அம்மன் கோவில்

image

அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் ஆரணி வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில்களில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட சிற்பங்களும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. விஜயநகர பேரரசர் காலத்தில் புகழ்பெற்ற வணிக நகராகவும், ஆன்மிக தலமாகவும் விலங்கி வந்தது. இக்கோயில் அக்காலத்தில் ஊரின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டுள்ளது.மேலும் அண்ணாமலையார் கோவிலுக்கு அடுத்த பெரிய கோவில் பெரிய அம்மன் ஆலயம் இதுவாகும்.

News August 26, 2024

திருவண்ணாமலை அருகே 7 பேர் மீது வழக்கு பதிவு

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நேற்றிரவு தனிப்படை எஸ்.ஐ. ராஜசேகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரில் சென்றவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய போது, அதை தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் நடந்தது . இதில் ராஜேஷ், மணிகண்டன், பிரசாந்த், சேதுராமன், பாலாஜி, ஆகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News August 26, 2024

ஆரணி அருகே விபத்து: 22 பேர் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். புதுச்சேரி பிரித்திங்கா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 22 பேர் பலத்த காயங்களுடன் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றபோது அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

News August 26, 2024

செப்.2க்குள் விண்ணப்பிக்கலாம்: தி.மலை கலெக்டர்

image

தி.மலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்.2 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆர்வம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை அணுகலாம்.

News August 26, 2024

வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

image

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!