India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்டம் சேத்துப்பட்டு, அப்பேடு, தச்சாம் பாடி, தேவிகாபுரம், ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை 8ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் வாரியம் கோட்ட பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
போளூர் அருகே உள்ள களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாக கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பருவ மழை காலங்களில் பள்ளி கட்டிடங்கள் தன்மை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் கல்வி திறனையும் மாணவர்களிடையே கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது கொடி நாள் வசூலில் ரூ.94.57 லட்சம் வசூல் செய்து சாதனை புரிந்தார். இதனை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மாவட்ட ஆட்சியரை பாராட்டி வழங்கிய சான்றிதழை இன்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரபாகர் பணியிடம் மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆரணி, தண்டராம்பட்டு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ஆரணி டவுன்,சைதாப்பேட்டை, இ.பி.நகர்,கொசப்பாளையம்,சேவூர்,ரகுநாதபுரம், சேத்ப்ட்ரோடு,வெட்டியான்தொழவம்,குன்னத்தூர், அரியப்பாடி, முள்ளிப்பட்டு,ஹவுசிங் போர்ட், விண்ணமங்கலம், தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர், நாளாம்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்கியுள்ளார். ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த்தி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதில் நடிகர்கள் அப்பு குட்டி, தீபா, காயத்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குருமூர்த்தி பாடல்கள்களை எழுதியுள்ள நிலையில் ஜெர்சன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை மாதிரி பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் அடிப்படைக் கட்டுமானங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவர்களை சந்தித்து ஊக்கமளித்தார். இந்நிகழ்வின் போது கல்வித்துறை அதிகாரிகள் மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள நீதிமன்றத்தில் புதியதாக அலுவலக பணியாளர்கான நேர்காணல் 6.10.2024 இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான நேர்காணல் கூட்டத்தில் சுமார் 200 பேர் கொண்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இன்று ஒரே நாட்களிலேயே தட்டச்சு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனி நபர் நேர்காணல் நிகழ்வும் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.