India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையை சேர்ந்த மோகன்(50), துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், வெம்பாக்கம் அருகே உள்ள மானாமதியில் வியாபாரம் முடிந்து சென்னைக்கு செல்வ தற்காக காஞ்சீபுரம் – வந்தவாசி சாலை மெயின் ரோட்டில் செய்யாறு தாலுகா மகாஜனபாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அறிமுகமான சௌந்தர்யா, நேற்று (பிப்.12) ஆன்மிக தரிசனம் செய்தார். அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அண்ணாமலை மலைச்சுற்று கிரிவலம் மேற்கொண்டார். அவரைக் கண்ட பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எளிமையான தோற்றத்தில் வந்த அவர், பக்தி உணர்வுடன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

தி.மலை மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் 9 இடங்களில் நடந்தது. தி.மலை, ஆரணி, சேத்துப்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 800 பேரை போலீ சார் கூண்டோடு கைது செய்தனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் நாளை பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய இரு நாட்கள் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகையால் பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 இரண்டு நாளுமே இளங்கலை மற்றும் முதுகலை (முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி) மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. என கல்லூரியின் முதல்வர் ரேவதி அம்மையார் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விஷன் 2030 ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ கிரி, மேயர் நிர்மலா வேல்மாறன், கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

தி.மலை: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் குப்பைகளை கொட்டி, எரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.11) மரத்தடியில் வைக்கப்பட்ட தீ, காற்றின் வேகத்தில் மரத்தைப் பற்றியது. இதையடுத்து மரம் கொளுந்து விட்டு எரிந்து விழுந்தது. இதைக் கண்ட அருகே இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
Sorry, no posts matched your criteria.