India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வந்தவாசியில் தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழாவில் விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் விழாவில் சாலையில் பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 110 இடங்களில் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் அல்லாத நபர்கள் வியாபாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மலை கலெக்டர் கறாராக தெரிவித்துள்ளார்.

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC ஐ உருவாக்குங்க. SHARE!

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் இந்த <

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்.10) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பேசினார். இதில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 1,720 நியாயவிலைக் கடைகள் மூலம் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 6,60, 939 அரிசி குடும்ப அட்டைகள், 2,907 சா்க்கரை குடும்ப அட்டைகள், 76ஆயிரத்து 869 அரிசி குடும்ப அட்டைகள், 46ஆயிரத்து 640 முதியோா் உதவித்தொகை அரிசி பெறும் அட்டைகள், 475 அரிசி பெறும் அட்டைகள் ஆகும்.

தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(பிப்.10) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடிட்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம், மேலப்பாளையம் வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரை நேற்று குரங்கு ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அவருக்கு தலையில் 4–5 தையல்கள் போடப்பட்டுள்ளது. செங்கம் நகரப் பகுதியில் குரங்குகள் மற்றும் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு அச்சமும் இடையூறும் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.