Tiruvannamalai

News October 14, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 14, 2024

அண்ணாமலையார் கோவிலில் 1.20 லட்சம் பேர் தரிசனம்

image

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையால் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதில் நேற்று சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். மேலும் கடந்த மூன்று நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

News October 14, 2024

தி.மலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் வருகின்ற 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் நவம்பர் 09, 10, 23, 24 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களும் நடைபெறும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை

image

போளூர் படவேடு செண்பகத்தோப்பு அணை நீர் கிடுகிடுவென நிரம்பி வருவகிறது. 62 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 55.37 அடி உயரம் நீர் நிரம்பி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்நேரமும் அணை திறக்கப்படலாம். கமண்டல நாகநதி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 14, 2024

பேரிடர் குறித்து தொலைபேசியில் தெரிவிக்கலாம்

image

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதற்காக TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதி பேரிடர் தொடர்பான புகார்களை 1077 அல்லது 04175232377 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 14, 2024

தி.மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

News October 14, 2024

தி.மலையில் 182 வாகனங்கள் ஏலம்

image

தி.மலை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 182 பலதரப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் 20.10.24 முதல் 22.10.24 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஏலம் நடைபெறுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் 18% ஜிஎஸ்டி சேவை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

திருவண்ணாமலையில் மதியம் 1மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், இன்று மதியம் 1மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் 1 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தின் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

அரசு மருத்துவமனையில் துணை முதல்வரின் கூடுதல் செயலா் ஆய்வு

image

தமிழக துணை முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் செயலாளர் பிரதாப், செய்யாறு அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடி தீர்வு காண மருத்துவமனை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், மூன்றடுக்கு கட்டடப் பணிகளையும், வேல் சோமசுந்தரம் நகர் பகுதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார்.

News October 14, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியா் அதிரடி உத்தரவு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், தொடா்ந்து கண்காணிக்கவும், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறையினா் மழை பாதிப்புகள் குறித்து தொடா்ந்து கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

error: Content is protected !!