India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், அதனை பயன்படுத்தவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒரே நாளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவினரும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கால்நடை வளர்போரின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த தகுதியானோர் செப்.13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04175-223030 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆய்வு பணியை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ராஜகோபுரம் அருகில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை வழிமறித்து இடையூறு செய்யக்கூடாது என திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று அறிவுரை வழங்கினார். மேலும் இது போல் தொடர்ந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நம்மியம்பட்டு அருகே ஜவ்வாது மலை பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கோடை விழாவின் நிறைவு விழாவில் நேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்ட மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் மற்றும் கோப்பைகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகரம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திரளான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.