India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம், மூலனூர், குண்டட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்தவும், இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், வரும் 23ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்துள்ளது. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினாலும் ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றாலும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நஷ்ட ஈடும் வழங்குவதில்லை. இந்நிலையில் ஆறு மாதத்தில் மட்டும் 195 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியது குறிப்பிடத்தக்கது.
1.உடுமலை மலை கிராமத்தில் தொடரும் சோகம்
2.திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்
3.போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
4.உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
5.மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
6.திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
7.ஊத்துக்குளி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் பலி – விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது, குமரன் சாலையில் உள்ள லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடக்கும் முகாமில் முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் கார்டு எடுப்பது போன்றவற்றை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி தினமான கடந்த ஒன்றாம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிராம சபை கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் அரண்மனைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தைத் திரையிட வேண்டும். இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது” என கருத்து கூறிய நிலையில், திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், திருப்பூர் சுப்ரமணியன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திரு முருக நாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களாக விளங்குகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு 5 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் என சுற்றுலாத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. அதன்படி அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலுக்கு 31,000 பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.