India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேக் முகமது என்கிற சலீம் (30), விக்னேஷ் (23) மற்றும் பன்னீர்செல்வம் (35) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் பெயரில் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற நலம் பெறும், ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் அமித் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<

திருப்பூர் மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Sewing Machine Operator-PwD, LD பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் 4, வார்டு எண் 39 பெரியாண்டிபாளையம் பகுதியில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக கட்டடங்கள் கட்டப்படுவதை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

▶திருப்பூர் மாவட்ட ஆட்சியர் – 0421-2971100. ▶வருவாய் அலுவலர் – 0421-2971122. ▶மாவட்ட வழங்கல், அதிகாரி – 0421-2971116. ▶தலைமை கல்வி அதிகாரி – 0422-2305943. ▶மாவட்ட சமுகநல அலூவலர் – 0421-2971168 ▶திருப்பூர் போக்குவரத்துத்துறை – 0421-2422424. ▶பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் -0424-2265650. ▶தீயணைப்புத்துறை – 0421-2472101. ▶அரசு மருத்துவமனை – 0421-2422201. இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

திருப்பூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.