Tiruppur

News December 29, 2024

முத்தூரில் தேங்காய் ஏலம்

image

முத்தூர் ஒருமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் சனிக்கிழமை தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகிய, வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் வெள்ளகோவில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, விவசாயிகள் விற்பனைக்காக தேங்காய் கொண்டு வருகின்றனர். தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு சுமார் 2.50 டன் அளவில், ஒரு லட்சத்து 64 ஆயிரத்திற்கு, விற்பனை செய்யப்பட்டது.

News December 28, 2024

திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்களை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கணக்கெடுப்பு செய்யப்பட்டதில், யாரும் கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக மாவட்ட உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஒன்றிய ஆணையாளரிடம் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

பல்லடத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கலைச்சுடர் மணி விருது

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த வல்லி கும்மி கலைஞருக்கான கலைச்சுடர் மணி விருது பல்லடம் பகுதியைச் சேர்ந்த முனைவர் ஆயிஷா அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் கலைச்சுடர் மணி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினர்.

News December 28, 2024

பல்லடம் அருகே விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

image

பல்லடம் அருகில் உள்ள கேத்தனூர் அருகே உடுமலை பல்லடம் சாலையில் காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2024

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு

image

மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் “யூரியா மூட்டைகளை மானியத்தில் பெற்று, அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக, நிறுவனங்களுக்கு யூரியா விற்பதை தடுக்க வேண்டும்” என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

News December 28, 2024

திருப்பூரில் கைத்தறி ஜவுளி கண்காட்சி 

image

2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய, தமிழகத்தில் முக்கிய இடங்களில் இந்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, ஹத்கர்கா மேளா, திருப்பூர் குலாலர் திருமண மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 11ஆம் தேதி வரை, 15 நாட்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

திருப்பூரில் செவிலியர் பணி நேர்காணல் அறிவிப்பு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்கால உள்பணியிடங்களை மாநகராட்சி நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நகர சுகாதார செவிலியர்கள் 6 பேரும், மருந்தாளுனர் 2 பேர், ஆய்வக நுட்புனர் 6 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வரும் 10ஆம், தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

News December 27, 2024

திருப்பூரில் பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், டிசம்பர் மாதம் வரை இதுவரை 790, டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர். இதே முந்தய ஆண்டில் 691 கர்ப்பம் தரித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 14.32% அதிகம் என கூறப்பட்டுள்ளது.  இதனால் குழந்தை திருமணங்களும் கனிசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 27, 2024

குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News December 27, 2024

பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

image

பயணிகளின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.05 மணிக்கு திருவனந்தபுரம் அடையும் என சேலம் கோட்டை ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

error: Content is protected !!