India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, ஊதியூர், வெள்ளகோவில், செய்யூர் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் மின் கட்டணம், மின் தடை, புதிய இணைப்பு, மீட்டர் பழுது, கூடுதல் கட்டண வசூல் மற்றும் ஆபத்தான மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் ‘மின்னகம்’ என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இதற்காக 94987 94987 எண்ணை அழைத்தால் விரைவான, உறுதியான தீர்வு கிடைக்கும். மேலும் உங்கள் புகார்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறுவீர்கள். SHARE IT!

திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு வரும் 16-ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறை எண் 20-ல் கல்விக் கடன் முகாம் நடக்கிறது. மாணவர்கள் <

திருப்பூர்: தாராபுரம் அருகே இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 3 பேர் காயமடைந்தனர். தாராபுரத்தை அடுத்த உடுமலை ரோட்டில், கொண்டரசம்பாளையம் அருகே நேற்று இரவு 7:45 மணியளவில் சென்று கொண்டிருந்த கார் மீது, மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருப்பூர் மேற்கு மாவட்டம், பல்லடம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் ஏ.சித்துராஜ். இவரை அந்த பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சித்துராஜ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

தாராபுரத்தில் மிகவும் பழமையான காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம். (SHAREit)
Sorry, no posts matched your criteria.