India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டுக்கு நாமக்கல், சத்தியமங்கலம், சேலம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தொடர் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்து ஆங்கிலப் புத்தாண்டையோட்டி, மல்லிகைப் பூ கிலோ ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மல்லிகைப் பூ விலை குறைந்து கிலோ ரூ.1,600 நேற்று விற்பனையானது.
திருப்பூர் எஸ்.பியாக யாதவ் கிரிஷ் அசோக் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், “ பல்லடம் 3 பேர் படுகொலை வழக்கு, புலன் விசாரணை, நேரடியாக கண்காணிக்கப்படும். மக்களின் வாழ்க்கைக்கும், உடமைக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். இனி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறினார்.
திருப்பூர் வழியாக செல்லும் பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை, வழக்கம் போல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 4, 5 &6ம் தேதி அட்டவணைப்படி இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கைப்பேசியால் இயங்கும், தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி, ரிமோட் கண்ட்ரோல் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி, 250 விவசாயிகளுக்கு, மானியத்தில் வழங்கப்படவுள்ளது. உதவி செயற்பொறியாளர், 9443751142 அல்லது உதவி செயற்பொறியாளர், தாராபுரம் 9443778124, உதவி செயற்பொறியாளர், உடுமலை 9600159870 ஆகிய எண்களில் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக, யாதவ் க்ரிஷ் அசோக் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பி.டெக் படித்துள்ளார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர காவல் துறையில் துணை ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
உடுமலைப்பேட்டை நகராட்சியில் தற்போது 33 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் அருகாமையில் உள்ள பெரியகோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி ஆகிய இரண்டும் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் இணையும் ஊராட்சிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சியில் பெரிய கோட்டை, கணக்கம்பாளையமும், தாராபுரம் நகராட்சியில் கவுண்டன்புதூர், நஞ்சியம்பாளையமும் பல்லடம் நகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூர், மாணிக்கபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கப்படுகிறது. மேலும் அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரிலுள்ள கோவில்களில் இன்றைய தினம் விசேஷ வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 20 ரூபாய், 50 ரூபாய் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் என பண தாள்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா காரணமாக, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரத்துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் 16 வயது பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாணவி காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு, ஆனந்தன், மாணவியின் கழுத்தை அறுத்து, கொலை செய்தார். இந்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.