India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில், இன்று ஈச்சர் வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சதீஷ்குமார், சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு இறந்துள்ளனர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், அவிநாசியை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக என்.தினேஷ் குமாரும், காங்கேயம் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய, திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மூ.பே சாமிநாதனும், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல பத்மநாபனும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, செல்வராஜும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சப்-ஜூனியர் ரேங்கிங் இறகு பந்து போட்டிகள் மதுரை மற்றும் ராம நாதபுரத்தில் நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டை யர் பிரிவில் திருப்பூர் வித்யாசாகர் பள்ளியை சேர்ந்த மற்றும் கோவை வெங்கிஸ் பேட் மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறும் வேதாந்த்ராம், திருப்பூர் டி.இ.ஏ. பப்ளிக் பள்ளி மற்றும் லெஜண்ட்ஸ் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறும் ஜெய்முகுந் தன் ஆகிய 2 பேரும் வெற்றி பெற்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
திருப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்களில் வரும் 19-ந்தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை, மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
திருப்பூர் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருப்பதாக, நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சோதனை நடத்திய போது வங்கதேசம், டாக்கா பகுதியைச் சேர்ந்த ரகுமான் மற்றும் அவரது மனைவி அஞ்சனா அக்தர் ஆகியோர் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் அரசு சார்பில் கமிட்டி மீட்டிங் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் கூட்டத்திற்கு வருகை புரிந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் ஆகியோர் சந்தித்து கொண்டனர். மேலும் இருவரும் தங்களது நலம் விசாரித்து கொண்டனர்.
திருப்பூர் நொய்யல் வீதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு கணித ஆசிரியராக புதுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர வடிவில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது அநாகரீகமாக மாணவரிடம் நடந்து கொண்டதாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் புகார் தெரிவித்தனர். இந்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியரை போக்சோ-வில் நேற்று கைது செய்தனர்.
அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய ஊர்களில் 11-02-2025 இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு காவல் அதிகாரிகளின் விபரங்களை திருப்பூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர ரோந்து காவல் பணியில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.