Tiruppur

News June 3, 2024

வெள்ளகோவிலில் உணவு வழங்கிய திமுகவினர்

image

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று வெள்ளகோவில் சொரியங்கினத்துப்பாளையம் பகுதியில் உள்ள சர்வாலயம் முதியோர் இல்லத்தில் ஒருங்கிணைந்த வெள்ளகோவில் திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி. முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

திருப்பூர்: மது குடிக்க பணம் தராததால் வாலிபர் விபரீதம்

image

காங்கேயம் அருகே பாப்பினி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு கணையம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே வாலிபர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 2, 2024

பல்லடம் அருகே கைவரிசை: 2 பேர் கைது

image

பல்லடம் அருகே உள்ள சென்னிமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது வீட்டில் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணம் மற்றும் ஐந்து பவுன் நகை திருடி சென்றனர். அதேபோல் மற்றொரு வீட்டில் நச்சால் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை தேடி சென்றனர். இந்த வழக்கில் போலீசார் கள்ளக்குறிச்சி சேர்ந்த ரஷீத் (23) என்ற வாலிபரையும் அவரது தாய் ரவிதா (41) என இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News June 2, 2024

ரேஷன் அரிசி கடத்தி 2 பேர் கைது

image

தாராபுரம் அலங்கியம் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சீத்தக்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News June 1, 2024

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு

image

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் 29ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சி நடைப்பெற்றது. இந்த நிலையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியானது சில நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலக படித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

திருப்பூர்: லாரி டிரைவருக்கு அடி உதை

image

வெள்ளகோவில் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (45), லாரி டிரைவர். இவர் நேற்று காடையூரான் வலசு டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தியுள்ளார். அப்போது எல்கேசி நகரை சேர்ந்த உமாநாத் என்பவர் குடிபோதையில் அக்பர் பாஷாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாநாத் அக்பர் பாஷாவை மதுபாட்டினால் தாக்கினார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் உமா நாத் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News June 1, 2024

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது

image

திருப்பூர் நல்லூர் காவல்துறையினர் நேற்று காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஜன் குமார் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மாநகரம் முழுவதும் தனிப்படையினர் கஞ்சா தடுப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

News May 31, 2024

திருப்பூர்: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

image

பல்லடம் தபால் அலுவலக வீதியில் உள்ள நாராயணபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தெய்வசிகாமணியின் நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

News May 31, 2024

பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் பதிவு செய்ய இன்றே கடைசி!

image

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் கூறப்பட்டதாவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருந்திய விதிகள் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி பிளாஸ்டிக் பொருள்கள் காண விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் பதிவு செய்ய இன்று(மே 31) கடைசி நாள் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!