Tiruppur

News December 8, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடிமக்களும் கபீர் புரஸ்கார் விருது வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இவ்விருதை விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு இணையதளமான www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

News December 7, 2024

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (07.12.2024) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

திருப்பூர்: துப்பு துலங்காமல் தவிக்கும் போலீஸ்!

image

திருப்பூர் மாவட்டம், பல்லடம், அவிநாசிபாளையத்தில், 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 9 நாட்கள் ஆகியும், துப்பு துலக்க முடியாமல் போலீசார் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணையை விரிவுபடுத்தி இருந்தாலும், இதுவரை கொலையாளிகள் தொடர்பாக முறையாகத் தகவல் கிடைக்கவில்லை. கொலை நிகழ்ந்த இடத்தில் கிடந்த சிகரெட் துண்டை வைத்து, போலீசார் துப்பு துலக்க முயற்சித்து வருகின்றனர்.

News December 7, 2024

திருப்பூர் ரயில் நிலைய முன்பாக 22 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருப்பூர், ரயில் நிலையத்தின் முன் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக 2 மூட்டைகள் இருப்பதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று அந்த மூட்டைகளை கைபற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட, 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News December 7, 2024

எரிவாயு நுகர்வோர்களுக்கான கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

News December 7, 2024

இன்று இப்பகுதியில் மின்தடை

image

திருப்பூரில் இன்று(7.12.24) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி திருப்பூரில், உடுமலை, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், சீல நாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 7, 2024

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், எட்டு தொகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டனர். இந்நிலையில் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் இறந்தவர்களின் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படாமல் உள்ளது.

News December 5, 2024

திருப்பூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ திருப்பூரில் 330 கிலோ சைனா பூண்டு பறிமுதல் ➤ பல்லடம் அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை ➤ அவிநாசியில் கொடூர கொலை: குற்றவாளிகள் 5 பேர் கைது ➤ திருப்பூரில் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம் ➤ திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு ➤ பல்லடம் கொலை சம்பவம்: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு ➤ தளவாவாய் பட்டணத்தில் மிதமான மழை

News December 5, 2024

வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

image

திருப்பூர் காட்டன் மில் ரோடு பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவன தொழிலாளர்களான முருகன் ,தங்கப்பிள்ளை தம்பதியின் மகள் அனிதா. இவர் கம்போடியா நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். மேலும், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் முயற்சியில் வெளிநாடு சென்று வெள்ளி பதக்கம் பெற்றார். இந்நிலையில் இவருக்கு துணை மேயர் நேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

error: Content is protected !!