Tiruppur

News June 25, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 25, 2024

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

image

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இந்த தொகுதிக்கு தொடர்ந்து 2 ஆவது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 25, 2024

கள்ளச்சாராயம்: திருப்பூரில் செல்போன் எண்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் கிறிஸ்துராஜ், கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க 94981 81209 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

மானிய கோரிக்கை தொடர்பாக பேசிய அமைச்சருக்கு வாழ்த்து

image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சுவாமிநாதன் மானிய கோரிக்கையில் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் மன்றத்திற்கு வழங்கி பதில் உரையாற்றினர். அதற்கு முன்பாக அமைச்சரை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் நேரில் சால்வை அணிவித்து நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

News June 25, 2024

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் கிராமங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ளார்.

News June 25, 2024

திருப்பூர்: 13 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் நிர்வாக நலன் கருதி முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 13 பேரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உடுமலை, தாராபுரம், பல்லடம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, காங்கேயம், அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றிய நில வருவாய் ஆய்வாளர்கள் நேற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

News June 25, 2024

திருப்பூர்: தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதால் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News June 24, 2024

திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்

image

திருப்பூர்-காங்கேயம் சாலை போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News June 24, 2024

கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேஸ் நுகர்வோர் களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பியின் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் முகவர்கள் மற்றும் என்னை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு நுகர்வோர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என நேற்று தெரிவித்துள்ளனர்.

News June 24, 2024

திருப்பூரில் நாளை தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தே.மு.தி.க திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியானதை கண்டித்தும்,தமிழக அரசை கண்டித்தும் நாளை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!