Tiruppur

News July 28, 2024

திருப்பூர் சுகாதார நிலையங்களில் வேலை

image

ஆயுஷ் மற்றும் தேசிய சுகாதார மிஷன் கீழ் இயங்கும் பல்வேறு அரசு துறை சுகாதார நிலையங்களில் உள்ள /காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பல் அறுவை சிகிச்சை நிபுணர், பல் உதவியாளர், டிரைவர், மருந்தாளர், சித்தா மருத்துவர், பல்நோக்கு பணியாளர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>விண்ணப்பிக்கவும்<<>>.

News July 28, 2024

கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள்

image

திருப்பூரில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத தாய், தந்தை இல்லாத மாணவர்களுக்கு இன்று 2ஆம் கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News July 28, 2024

ரேஷன் அரிசி கடத்தலா ? புகார் எண்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு 1800 599 5950 சென்று கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் 94981 04500, ஆய்வாளர் 94981 26706 என்ற எண்களின் தொடர்பு கொள்ள அறிவிக்கபட்டுள்ளது.

News July 28, 2024

TNPL: திருப்பூர் அணி அபார வெற்றி

image

திருச்சி – திருப்பூர் இடையேயான TNPL போட்டி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

News July 28, 2024

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

News July 27, 2024

திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டை தமிழகத்தைச் சார்ந்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி எம்பி ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

News July 27, 2024

மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

image

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வரும் 29.07.2024 அன்று சூரியம்பாளையத்தில் உள்ள கல்லூரிபகுதியில் மாற்றுப் பணிகள் நடைபெறவுள்ளதால் 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 12 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது. இதனால், அன்று கால நீர் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

ஒலிம்பிக் வளையம் அமைத்து வாழ்த்து

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டு பாரிசு ஒலிம்பிக்கில் இந்திய சிறப்பான முறையில் பதங்களை பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் வளையங்கள் கொண்ட அமைப்பை மாணவ, மாணவிகள் இன்று உருவாக்கினர். தலைமையாசிரியர் செந்தில் குமார் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

News July 27, 2024

திருப்பூர் இரயில் நிலையம் முன்பு திமுகவினர் ஆர்பாட்டம்

image

திருப்பூர் மாவட்ட இரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் நிதி நிலை பட்ஜெட்டை கண்டித்து திமுக வடக்கு மாவட்டம் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி, சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.

News July 26, 2024

மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

image

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சையும் பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் “வருமுன் காப்போம்” இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!