India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட சுகாதார நலத்துறையின் பல்வேறு பிரிவுகளில் 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க ஆக. 9 கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 8th, 10th, 12th, Diploma, B.Sc., BDS. மாதச் சம்பளம் ரூ.40,000 வரை. விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க: https://tiruppur.nic.in/ உடனே முந்துங்க மக்களே!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 575 மனுக்களை வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ, வழக்கில் தொடர்புடைய 5 பேர் குறித்த தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கான தகவலுக்கு ரூ.5 லட்சம் வீதம், 25 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. தகவல் தெரிவிப்பவர் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 9962361122); மின்னஞ்சல்: infoche.niagov.in எனவும் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூர் கழக திமுக சார்பில் முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயுஸ் & தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 36 பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணபிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 9 ஆம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு இங்கு <
சிக்குபுகாய் ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீராம் ரத்தினத்தை சந்தித்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் முத்தம்மாள் அறக்கட்டளை சார்பாக திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியினை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக இருந்த இவர், கடந்த 24ஆம் தேதி வேன் ஓட்டும் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் விதமாக வேனை சாலை ஓரமாக நிறுத்தி காப்பாற்றினார். இன்று ஈரோடு தொகுதி எம்.பி. பிரகாஷ் சேமலையப்பன் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
Sorry, no posts matched your criteria.